Wednesday, May 20, 2009

Tamils' death ash on International Community's face

The reports from IC brings no action by IC in regards to SL. International Community will face media with failure and shameful face against SriLankan regime. Everyone including UN silently approved this carnageall for one man that is tiger's leader. The failure of USA's, UK's,EU's, UN's against Sri Lanka means it's such waste people even talkabout human rights. UN has it's own corruption by having VijayNambiyaar. This means every world leader's and UN's, and AI's face iscovered with Tamils death ash to say to the world 'we're deaf and dump' as Innercity Press called UN couple of days ago. International media has been bought to announce tiger leader's death to cover up the hiden massive slaughtering continue to happen in the final war zone. No other country in my knowledge challenged and ashamed the the rest of the world like Sri Lankan regime. World leader only warning no action, but Sri Lankan regime only actionnever changed their agenda of Genociding Tamils.Now everywhere in Sri Lanka, Tamils are being bullied at this minuteand soon will go under slavery. It's laughable when news breaks come on missing child, child abuse byparents, child pornos, bullying at school along with thousands ofother adults laws in western countries comparing to failure of International Community andUN in regards to Sri Lanka where all of these laws are broken by Sri Lankan retime. God save Tamils who are waiting to go on slavery.

Monday, May 18, 2009

தர்மம் மறு படியும் வெல்லும்

உலகே உனக்கு கண் இல்லையா? என் இனமே நாம் போராடினால் தோற்றுபோகோம்.துரோகிகளின் துரோகத்தினால் அல்லவா எம் இனம் அழிந்துகொண்டிருக்கிறது. வீரபாண்டிய கட்டபோமனுகே ஒரு எட்டப்பன் இருக்கும் போது பதவிக்கும் பணத்துக்கும் விலை போகாத நம் தேசிய தலைவனுக்கு ஆயிரம் எட்டபர்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. யேசுவிற்கு கூட ஒரு யூதாஸ் துரோகிகளே இல்லாத வரலாறே இருக்காதா? கூட இருப்பவர்கள் தானே குழி பறிகிறார்கள்இறைவா இன்னுமா இவர்களை நீ பார்த்துக்கொண்டு இருக்கிறாய்? அழித்துவிடு அழிந்துகொண்டிருக்கும் எம் இனத்தை இவர்கள் இன்னமும் அழித்துக்கொண்டு இருக்கும் எம் இனத்தை அழிபவர்களை அழித்துவிடு
எங்கள் போராளிகளே உங்கள் மனத்துணிவும் ஆற்றலும் எமக்க எம் சந்ததிக்காக நீங்கள் சிந்திய ஒவொரு துளி ரத்தமும் வீணாகாது. வீண் போகக்கூடாது. உயிரை துறக்கும் போதும் உணர்வோடு மண்ணில் விழுந்த கண்மணிகளே மாவீர தெய்வங்களே உங்கள் ஆத்மாக்களும் போரிட்டு நம் இனத்தை காக்கும்.
துரோகிகளின் கைகளில் நாடு போவதை அதிகாரம் போவதை நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது. இன்றே பார்த்துவிட்டோமே. எப்படியெல்லாம் ஆட்டம் போடுது அரக்கர் கூட்டம் என்பதை. எத்தனை பெண்களை காணவில்லை எத்தனை கடத்தல் எத்தனை கொள்ளை இறைவா துரோகிகளிடம் இருந்து எம் இனத்தை காப்பாற்று எதிரிகளை தலைவர் பார்த்து கொள்ளவார்.
தீயவர்களை சூழ்ச்சியால் வெல்லும் உத்தியை காட்டி தந்தான் பரந்தாமன்எம் தலைவா எமக்கு எல்லாமும் நீ தான். உன் விஸ்வ ரூபதிர்க்காக தான் நம் இனம் காத்துக்கொண்டு இருக்கிறது.
கௌரவரோ நூறு பாண்டவரோ ஆறு (கண்ணனோடு சேர்த்து) எத்தனை பெரிய முதலைகள் இருந்தாலும் வெற்றி என்றும் நீதிக்கே
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மறு படியும் வெல்லும்.

Saturday, May 16, 2009

கௌரவர் படையின் தற்காலிக வெற்றி

இந்திய தேர்தல் ரொம்ம்ப ரொம்ம்ப முறையாக நடந்து முடிந்து இருக்கிறது. மக்கள் எது நியாயமோ அதற்கு பணம் வாங்கி ஓட்டு போட்டு இந்திய ஒரு ஜனநாயக நாடு என்று நிருபித்து உள்ளார்கள். மேற்கத்திய நாடுகளில் இன்னும் பேப்பரை நம்பி ஓட்டு குத்திக்கொண்டு இருக்க அட இந்தியாவில் மின்வாக்கு இயந்திரமாம். அடேங்கப்பா என்ன ஒரு வளர்ச்சி. இதுவல்லவா குளறுபடி செய்வதற்கு நல்ல முயற்சி. வாழ்க ஜனநாயகம். ஆனாலும் தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும். தமிழர்களே என் இனமே நாம் ஊழல் மிகுந்த இந்தியாவை நம்பி கூனல் விழுந்த கருணாநிதியை நம்பி இல்லை. நாம் தர்மத்தை நியாயத்தை நம் ஆற்றல் மிகுந்த தலைவனை நம்பி இருக்கிறோம். எதற்கும் கலங்கி நிற்க நாம் பிறந்தவர்கள் இல்லை.

Friday, May 15, 2009

தமிழ்நாட்டில் இருந்து மனிதனின் கடிதம்.

"உதம் சிங்" யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன்.
1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் , படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O'Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி. இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer), பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று. துவள வில்லை உதம் சிங், அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே Michael O'Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-Mar-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O'Dwyer ஐ கொல்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள் மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து.... உதம் சிங்கை 31-July-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400 மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார். பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள். சரி இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்................. 400 பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்..... ஆனால் இங்கிருந்து ராஜீவ் காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்து இலங்கை ஈழத்திற்கு சென்று 5400 பொது மக்களை மற்றும் 800 பெண்களை கற்பழித்து கொன்றதற்கு, சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா? “ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது” - மகாத்மா காந்தி 400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்..... அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்...... வந்தது. பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா? அவர்கள் செய்தால் தியாகி பட்டம்... நாம் செய்தால் தீவிரவாதி பட்டமா? நல்ல நியாம்டா சாமி............. சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ** தின்னும் மனிதர்களுக்கு, இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது....... ஆனால் ஒருவருக்கு புரிந்தது..... ''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன், யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன், விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார். ஆனால் ரன்பீர் சிங்கோ, 'இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால், நீ எனக்கு மகனே இல்லை' என்று சொல்ல... யோணன் அந்த lபுறக்கணித்திருக்கிறார்!'' ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன்? ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது................ மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்.................... 1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள். இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்.... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!! இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது... ?பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன்? அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே? சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே... அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண் சிவராசன் – உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்? இந்த வழக்கில் மேலும் நளினி, பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்? இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்??? இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்....... (NSA) ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!! எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?தமிழர்களில் இருக்கும் கருங்காலி மற்றும் பீ தின்னும் கூட்டம் சீகியர்களிடம் இல்லை.. இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது, தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்......... அட நாய்களே..... நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை….. இந்தியனாக இருக்க தேவை இல்லை….. தமிழனாகவும் இருக்க தேவை இல்லை மனிதனாக இருந்தால் போதும்..... சிந்தித்து பாருங்கள் நண்பர்களே சீக்கியர்களின் மயிருக்காக Turban அணியும் உரிமை கேட்டு பிரான்ஸ் அரசிடம் பேசிய மன்மோகன். ஈழ தமிழர்களுக்காக சிங்கள ராஜபக்க்ஷே விடம் பேச மறுப்பது ஏன்? சீக்கியனின் மயிரை விட மதிப்பற்றதா தமிழனின் உயிர்.....? உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் இது போய் சேரட்டும்....இப்படிக்கு, மனிதர் தமிழர்
இந்தியர்

எழுந்து நில் துணிந்து செல்.

இறுதிபோர் . நமக்கு நம் ஈழம் தமிழ் ஈழம் மலரும் காலம் நெருங்கி விட்டது. 2010 நம் தமிழ் ஈழம் நம் கையில் இருக்கும். இனிமேல் தான் நாம் எச்சரிகையாக இருக்க வேண்டும். ஒரு குருசேத்திரம் நடந்து கொண்டு இருக்கிறது. எப்போதும் தர்மம் தோற்றதாக வரலாறு இல்லை. தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும். ஒரு சிறந்த தலைவனை பெற்ற நாம் எப்போதும் கவலைபடக்கூடாது. ஆனால் இப்போது நம் இனம்? அழிகிறான். அழிகிறான். கருவிலயே அழிகிறான். இருப்பவர்களை மன நோயாளிகள் ஆகின்றனர். எதிரி நினைப்பது நடக்கக்கூடாது. வந்தேறிய குடி அவர்கள். நாம் அல்ல. இனி புலம் பெயர்ந்து வாழும் எமக்கு நிறைய வரலாற்று கடமைகள் இருக்கிறது. நமது தேசத்தை கட்டி எழுப்பும் பணி நிறைய இருக்கிறது. நிறைய வழிகளில் இருக்கிறது. இப்போது அதற்கான நடவடிக்கைகளில் நாம் இறங்க வேண்டும. அதற்கு முதல் நாம் நமது இளையோருக்கு துணையாக நின்று போராட்டங்களில் பங்கு கொள்ளவேண்டும். ஓன்று படு தமிழா ஓன்று படு வெட்டி பேச்சு பேசும் நேரம் அல்ல இது நமக்கு நாம் தலைவன் ஒரே நாம் தலைவன்.இங்கு தலைமை போட்டிகள் தேவை இல்லை. நாம் நம் தலைவர் சொல்வதை செயல் வடிவத்தில காட்டும் பணியில் இறங்க வேண்டும். அதுவே நமது கடமை.

Wednesday, May 6, 2009

Qustion our crediblity before questioning neibour

I am not trying to say anything because I'm a liberal but because we tamils are only acting on emotional base without thinking and analyzing. Those of us went up and down about liberals did not come out to talk in Ottawa have to think hard. Where have our emotions gone when the conservative Government along with China giving GOSL 3M$ on top of the feb announced 4M$+ funding because SL has asked its not enough to feed sheltered tamils. Why all of us are anger knife at china and not at our conservative government? Canada's money is not being distributed through aid agencies as discussed in the Parliament.
Why is it no one running up and down when the conservatives shake hand with GOSL? Have your emails and texts gone disapeared? I'm not trying to bring an argument on this, but because I got messages at that time, I am asking this. Which one is way serious, not showing up at rally or shaking hand with SL and giving money? I appreciate NDP showing up, but they are not a powerful party. They will take any candidate, they will speak anywhere because they will not be in a position to govern at this recent times.
Why do we need to go up and down on political parties. Lets talk about our great leaders in our community. They have all the connections with politicians and why have they failed to convince them to bring them to speak at the rally? or have they not tried hard?
Bev Oda is in SL without any pre-consulation meetings with our great leaders in our community? Havn't our great leaders pressured enough not to hand over the money to SL?
This is the best part. While she is handing over the money in SL, our great leaders in Toronto is paving way for her by even cancelling a massive human chain that was to happen instead of oppossing and demonstrating against.
Do we not have the courage to think and ask questions rather than only jumping up and down on emotions? or can we not question our great leaders within our community in Canada?
Lets fix our community before we say liberal, conservative or ndp.

Tuesday, May 5, 2009

கனடாவில் இருந்து ஒரு சகோதரரின் வேண்டுகோள்

எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய தமிழ் உணர்வாளர் அண்ணன் திருமாவளவன் அண்ணா,எங்களுக்கு விளங்கும் அரசிலில் யாரையும் நம்பமுடியாது என்று. இருப்பினும் காலாகாலமாக கலைஞரை நம்பி ஏமாந்து விட்டோம். இனியும் அவரை நம்ப முடியாது. அவர் 'ஒன்றும் என்னால் செய்யமுடியாமல் இருக்கிறது காங்கிரஸின் முடிவை மீறி' என்று சொன்னாலும் பறவாயில்லை, ஆனால் அவரோ கண்ணுக்கு முன் தெரியும்படியாக நாடகம் ஆடுகிறார். இது என்னொரு வகையில் காங்கிரஸ் தமிழினத்துக்கு செய்யும் அநியாயங்களையும் அழிப்புகளையும் மூடிமறைத்து அவர்களுக்கு இன்னும் வழியமைத்துக்கொடுக்கின்றார். தலைவர் எம். ஜி. ஆர் தமிழனை தலை நிமிர்ந்து நடக்கச்செய்தார் ஆனால் கலைஞரோ காங்கிரசுக்கு முன்னால் தமிழனை தலை குனிந்தது நிற்கச்செய்வதோடு, தமிழினம் இலங்கையில் இப்போ அழிந்துபோகக்கூடிய நிலைமைக்கு காரணமாக இருக்கின்றார்.இப்போதைய நிலையில் ஜெயலலிதா அம்மையாரின் தலைமையை தமிழகம் ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டது. வெளிநாட்டவர்களாகிய எங்களுடைய முழு விருப்பம் தமிளுணர்வாளராகிய உங்களின் பெயர் காங்கிரஸ் என்னும் தமிழ் அழிப்புக்காரர்கள் கூட்டணியில் சரித்திரத்தில் நிரந்தரமாக பதிபட்டுவிடக்கூடாதென்பதுதான். தி. மு. கா. கலைஞர் கூட்டணியில் இருந்து விலகி சரித்திர நாயகர்களில் ஒருவராக தமிழினத்தை காப்பாற்ற பாடுபடுங்கள். நெடுமாறன் ஐயாவுக்கு உறுதுணையாக இருங்கள். அன்புடனும் உரிமையுடனும் கேட்பது துரோகிகளுக்கு உங்கள் இதயத்தில் இடமளிக்காதீர்கள்.
நன்றி உங்கள் அவசர நடவடிக்கையை எதிர்பார்த்து,